பளை பகுதி கிணற்றில் இருந்து ஒன்றறை மாத சிசு, தாயின் சடலம் மீட்பு!!

675

Kinaru

பளை பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து தாய் மற்றும் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதன்போது பலியானவர்கள் 32 வயதான பெண்ணும் அவரது ஒன்றறை மாத குழந்தையும் எனத் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகள் மூலம் நீரில் மூழ்கியமையே மரணத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.