
ஆந்திர சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட போராட்டத்தால் நடிகை ரோஜா மயங்கி விழுந்துள்ளார்.
கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக கூறி, சபாநாயகர் சிவபிரசாத் ராவால் சபையில் இருந்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ரோஜா தொடர்ந்த வழக்கில், ஆந்திர சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நடிகை ரோஜா நேற்று காலை வந்துள்ளார், அவரை சபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரோஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.





