வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்தும் பங்குனி திங்கள் முழுநிலா கலைவிழா நாளை 22.03.2016 செவ்வாய்கிழமை வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயகல்விப்பணிப்பாளர் திரு.வ .ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெறுகிறது.
மேற்படிநிகழ்வில் கௌரவ ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சர் பிரதம விருந்தினராகவும் வவுனியா அரச அதிபர் M.B.R.புஸ்பகுமார விசேட விருந்தினராகவும் வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன் .தியாகராஜா,நடராஜா,இந்திரராஜா,தர்மபால,ஜெயதிலக ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் பங்கேற்கின்றனர்.






