உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

553

Body - Copy

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதன்டி பிரதேச காட்டுப் பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.காசல்றீ நீர்தேக்கத்திலிருந்து விமலசுரேந்திர நீர்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் பகுதியிலுள்ள சிறிய நீரோடையிலிருந்து குறித்த எலும்புக் கூட்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திற்கு விறகு சேகரிப்பதற்கு சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கமைய ஹற்றன் பொலிஸார் குறித்த எலும்புக் கூடுகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ,குறித்த எலும்புக்கூடு யாருடையது என்பது தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Body