வவுனியாவில் மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவினர் மீன் வியாபாரி மீது தாக்குதல்!!

1395

attacked

வவுனியாவில் மது போதையில் சென்ற இளைஞர் குழுவினர் வியாபார நிலையத்தில் நின்று கொண்டிருந்த மீன் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மறவன்குளம் மதுபான நிலையத்தில் சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு அவ்வீதியிலிருக்கும் வியபாபர நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு மீன் விற்பனையில் ஈடுபட்டுவிட்டு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த இரண்டு மீன் வியாபாரிகளிடம் மோட்டார் சைக்கிலில் மதுபேதையில் வந்த மூன்று பேரடங்கிய இளைஞர்; குழுவினர் மீன் வியாபாரிகளிடம் தகாத வார்த்ததைகளினால் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் மீன் வியாபாரிகளின் தர்க்கத்தில் ஒரு மீன் வியாபாரி மீது இளைஞர்கள் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் தலையில் படுகாயமடைந்த மீன் வியாபாரி நிசாந்த் 28 வயது உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.