மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை

819

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு அறுபது ஆண்டு கால சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கேகாலை உயர்நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர அறிவித்துள்ளார்.