அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைக் குட்டிகள் மீட்பு!!

395

tumblr_o2esz2dhNG1up2jnio1_1280

சட்டவிரோத அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளை மீட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீட்கப்பட்ட யானைகளில் 18 யானைகள் பின்னவல யானைகள் சரணாலயத்திலும், 12 யானைகள் உடவலவை யானைகள் சரணாலயத்திலும், மேலும் 4 யானைகள் உடவலவ யானைக் காப்பகத்திற்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருடன் இணைந்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட யானைக் குட்டிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.