வவுனியாவில் முன்னணி விளையாட்டுக்கழகமாக மருதநிலா விளையாட்டுக்கழகத்திற்கான அலுவலகம் இன்று (25.03.2016) காலை வவுனியா கற்குழியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி. நட்ராஜ், சிறிரேலோ கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. ஜனா ஜனகன், ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுக்கழகத்தின் அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கற்குழி அம்மன் கோவில் நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் சங்கம், சமுர்த்திச்சங்கம், சனசமூக நிலையம், வவுனியா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.