இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலாவது போட்டியில் 12 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் தென் ஆப்ரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது.
இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 20-20 தரவரிசையில் 1ஆம் இடத்தை இழக்க நேரிடும்.