
இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். 26 வயதான சென் குப்தா என்ற யுவதி கடந்த 24ஆம் திகதி காலி கோட்டைப் பிரதேசத்தில் வைத்து காணாமல் போயிருப்பதாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன யுவதி இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து இங்கு வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளத்துள்ளனர்.
இதேவேளை,காணாமல் போன இந்திய யுவதி தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் குறித்த யுவதியைத் தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருப்பதாக தெரிவித்ததுள்ளனர்.





