நீரில் மூழ்கி இருவர் மாயம்!!

725

River

தேதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் – தேதுருஓயாவுக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் உணவு அருந்திக் கொண்டிருந்த வேளை, ஏனையவர்கள் நீராடியுள்ளனர்.

இவர்களில் மெனிக்திவேல – திஸ்மட பகுதியைச் சேர்ந்த ஈ.ஜீ.வீரக்கோன் எனும் 53 வயதான நபரும், ரஞ்சித் பிரேமகுமார் எனப்படும் 39 வயதான நபரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.