
வெலிகம – மிரிஸ்ஸ உடுபில கடற் பகுதியில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்ட அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சீனப் பிரஜை பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





