வவுனியாவில் பொலிஸார் மீது தாக்குதல்!!

962

attack

வவுனியா கல்மடு ஆலயத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, கல்மடு ஆலயம் ஒன்றில் நேற்று (27.03) ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடு சண்டையாக மாறியது. இதனை தடுக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
.
இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்