2008.09.04 இல் இனம்தெரியாத நபர்களால் சுட்டு கொலைசெய்யபட்ட பம்பைமடுவில் வசித்த அமரர் பொன்னன் மகேந்திரன் அவர்களின் மறைவின் பின்னர் அவரது மனைவியான மெட்டில்டா அவர்கள் இரு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளையுடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா குட்செட் வீதியில் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.
தற்சமயம் மூத்த மகள் 10ம் ஆண்டில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் நடந்துசென்று கல்வி கற்றுவரும் நிலையில், அவருக்கு ஒரு துவிசக்கரவண்டி வழங்கும்படி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தரும், வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவும் ,திருமதி ம.மெட்டில்டா அவர்கள் தமிழ் விருட்சம் அமைப்பிடம் நேரடியாக கேட்டதன் பிரகாரமும், லண்டனில் வசிக்கும் உறவால் துவிசக்கரவண்டி நேற்று (28.03.2016) கல்லூரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி, பகுதித் தலைவர் ஆசிரியை திருமதி இந்துமதி, வகுப்பாசிரியை திருமதி மைதிலி, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தருமான எஸ்.எஸ். வாசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் உதயகுமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன் திருமதி ம.மெட்டில்டா, மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.






