டெங்கு பெருகும் சூழலை வைத்திருந்த 565 பேருக்கு எதிராக வழக்கு!!

663

Dengu

டெங்கு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 565 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 29ஆம் திகதி ஆரம்பமான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது எதிர்வரும் 4ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பமாகி இரண்டு நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 2இலட்சத்து 15,000 அதிகமான இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.