வவுனியா பூங்கா வீதியில் இருக்கும் இராணுவ விஷேட அதிரடிப்படையினர் வசமிருந்த நெற்களஞ்சியசாலையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.ரேகண புஸ்பகுமார இன்று பிற்பகல் பார்வையிட்டதுடன் விரைவில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
கடந்த 1997ஆம் ஆண்டிலிருந்து இந்த நெற்களஞ்சியசாலையினை இராணுவ விஷேட அதிரடிப்படையினர் தமது வசம் வைத்திருந்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்திருந்தனர்.
விவசாய அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளிற்கு அமைய இக்களஞ்சியசாலையினை அமைச்சு உயர் அதிகாரிகளிடம, இராணுவ விஷேட அதிரடிப்படையினர் ஆகியோருடனும் தொடர்பு கொண்டு இக் களஞ்சியசாலையினை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாகவும் இக்களஞ்சியசாலையில் 3000 மெற்றிக்தொண் எடையுள்ள நெற்களை களஞ்சியப்படுத்த முடியும். அத்துடன் இரண்டு விசாலமான நெற்களஞ்சியசாலைகளாக இருப்பதினால் வவுனியா மாவட்டத்திலுள்ள நெற்களஞ்சியசாலைகளைவிட இக்களஞ்சியசாலை மிகப் பெரியது என்றும் இக் களஞ்சியசாலையை நாம் பெற்றுக் கொண்டுள்ளது எமக்குப் பெரும் உதவியாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
மற்றைய நெற்களஞ்சியசாலைகளுடன் ஒப்பிடுகையில் இக்கயஞ்சியசாலை மிகவும் நேர்த்தியான முறையில் நெற் களஞ்சியப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்களஞ்சியசாலையினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.






