வவுனியா வரும் ஜனாதிபதி : அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதகதியில்!!

581

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வவுனியா விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் அபிவிருத்தி நடவடிக்கை துரிதப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு நாளை மறுதினம் (ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று) கையளிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு வவுனியா நகரின் அபிவிருத்தி ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக பஜார் வீதி, புகையிரத நிலைய வீதி என்பன செப்பணிடப்படுவருகின்றது. இவ் அபிவிருத்தி தொடர்பாக காப்புறுதி ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

யுத்த காலம் நிறைவடைந்து இது வரை செப்பணிடப்படாத இவ் வீதிகள் தற்போது ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு செப்பணிடப்படுவது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் இவ் அபிவிருத்தியினை ஜனாதிபதியின் வருகைக்கு முன் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

P1200133 P1200134 P1200135 P1200136 P1200137 P1200138 P1200139 P1200140 P1200141