மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் புகையிரதத்துடன் மோதி பலி!!

470

 
மன்னார் – தாராபுரம் பிரதான வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் நடந்துள்ளது.

இந்த விபத்தில் மன்னார் பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமையே வீடு திரும்பியதாகவும் மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று அதிகாலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2