திருடர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

524

Capture

புத்தாண்டுக்கு பொருள் கொள்வனவிற்காக தலைநகரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்ய தலைநகருக்கு வரும் பொதுமக்கள் தமது தங்கநகைகள்,பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் பணப்பைகளை திருடர்களிடம் பறிகொடுப்பதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புறக்கோட்டை, மஹரகம, நுகேகொடை உள்ளிட்ட பிரபலமான நகரங்களுக்கு வரும் பொதுமக்களே பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் பறி கொடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் திருடர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும், சந்தேகத்திற்கு இடமாக நடமாடும் நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கும் படியும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.