சுனில் கவாஸ்கரை நீக்கிய இந்திய கிரிக்கெட் சபை!!

517

Sunil

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் சபையின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் சபையின் மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் சபை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து கிரிக்கெட் சபை நீக்கலாம் என்று தெரிகிறது.

அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – தென்னாபிரிக்கா இடையே சமீபததில் நடந்த தொடரில் கவாஸ்கர் 90 லட்சம் வரை பெற்று இருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு 10 லட்சம் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 8 மடங்கு அதிகமாக கவாஸ்கர் வாங்குகிறார். இது கட்டுப்படியாகது என்பதால் கிரிக்கெட் சபை இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.