
வவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கணபதிப்பிள்ளை மனோகரசீலன் (வயது 42) என்பவர் நேற்று (07.04.2016) இரவு 8.00 மணியளவில் தனது வயலுக்குச் சென்றபோது அவரை யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.





