‘சிறுவர்களுடன் சித்திரை வருடம்’ எனும் தொனிப்பொருளில் மக்கள் வங்கி வவுனியா கிளை பிராந்தியக் காரியாலயம் நடாத்திய சிறுவர்களுக்கான நிகழ்வு பார்ப்போரை மனம் மகிழவைத்தது.
இளவேனில் முன்பள்ளி சிறார்களின் அழகான தோற்றமும் அற்புதமான விளையாட்டுகளும் உற்சாகமான நடனமும் ஓயாத மகிழ்ச்சியும் அனைவரையும் வேறோர் உலகிற்கு அழைத்துச் சென்றது.
போட்டிகள், பரிசுகள், குதூகலங்கள், ஆட்டங்கள் பாட்டங்களோடு தமது பண வைப்புக்களையும் மேற்கொண்டு பயன்மிக்க மாலையாக நேற்றைய தினத்தை மாற்றியமைத்து அனைவரையும் பாடசாலைக் காலத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.






