
வவுனியா சிறைச்சாலையில் காளிமுத்து இராமச்சந்திரன் (வயது 59) எனும் நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்தவேளையில் கடந்த இரு தினங்களாக திடீர் நெஞ்சுவலி காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 05.04.2016 அன்று இரவு மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கிறன.





