வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கண்காட்சியும் விற்பனையும் இன்று(08.04.2016) காலை வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கண்காட்சி 08.04.2016 தொடக்கம் 10.04.2016 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளதுடன். இக் கண்காட்சியில் பெண்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.











