விபத்துக்களை கட்டுப்படுத்த ஒட்டப்பட்ட பதாகை- ஒட்டப்பட்ட இடத்திலேயே விபத்து!!

425

625.0.560.320.160.600.053.800.668.160.90

பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் விபத்துக்கள் குறித்த அபாய எச்சரிக்கை பதாகைகள் வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துள்ளாகியிருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்யுள்ளனர்.

குறித்த விபத்தானது, பண்டாரவளை எல்லதோட்டை என்ற இடத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி பண்டாரவளை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.