தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில்இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வீட்டின் உரிமையாளரான ஏ.நுவான் சந்துரங்க (வயது 34) எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.அதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.