வவுனியா சூசைப்பிள்ளையார் குளவீதியில் நேற்று (11.04.2016) அதிகாலை மூன்று கடைகள் உடைக்கப்பட்டு துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா சூசைப்பிள்ளையார் குளவீதியில் நேற்று அதிகாலை மூன்று கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு 50,000 ரூபா பணம் மற்றும் சிகரட் பெட்டிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






