பூவரசங்குளம் தாலிக்குளத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 54 மாணவர்களுக்கு தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக கற்றல் உபகரணங்கள் கனடா வாழ் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் தாலிக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து கடந்த 10.04.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோனிப்பிள்ளை (பாலன்)தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.அபயசிங்க, சிவில் பாதுகாப்புக் குழுச் செயலாளர் இ.புனிதவதி, உறுப்பினர்கள் சண்முகராஜா சி.மகேந்திரன், கவிந்தன், மு.நாகலிங்கம், ராமலிங்கம், கபிலேஸ்வரி, தாலிக்குளம் பிரிவு பொலிஸ் அதிகாரி ஆர்.குமாரசிறி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






