வவுனியா பூவரசம்குளம் பகுதியில் குடும்பப்பெண் தற்கொலை!!

537

Suucide

பூவரசம்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நஞ்சருந்தி குடும்பப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பூவரசம்குளம் பகுதியில் வசித்து வந்த விக்கினேஸ்வரன் சரஸ்வதி என்ற 37வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே நேற்று மாலை கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இவரை உடனடியாக பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அங்கு காவு வண்டி இல்லாத காரணத்தினால் மோட்டார் சைக்கிலில் நஞ்சருந்தியவரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாவும் தெரியவருகின்றது.

மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.