வவுனியாவில் இளைஞர் குழுக்களிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில்!!

512

Mathu

கடந்த 14.04.2016 புத்தாண்டு தினமன்று இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் அக்கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றாக இருந்து உரையாடிக்கொண்டிருந்த சமயம் முச்சக்கரவண்டியில் வந்த 4 பேரடங்கிய குழுவினர் அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடாத்தியதாகவும் அதன்போது முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் இரும்பு பைப், பொல்லு என்பன கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 4 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல மணிநேரம் இரு குழுக்களும் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளதாகவும் அதன் காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளதாகவும் பின்னர் பொலிசாரின் தலையீட்டையடுத்து சில இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இச் சம்பவத்தில் பாலகிருஷ்ணன் துசாந்தன் (22 வயது), சிவராசா ஜெயதீபன் (25 வயது), யோகராசா பார்த்தீபன் (28 வயது) யோகராசா சுதர்சன் (24 வயது) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு குழுவினரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

யோகராசா பார்த்தீபன் (28 வயது) என்பவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.