தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தண்ணீர் பஞ்சம்: அணைகளை திறக்கும் சீனா!!

688

Skintype2.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தங்களது அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவு செய்துள்ளது.எல் நீனோ விளைவு காரணமாக பூமியில் திடீர் மழை, கடும் வெயில் போன்றவை ஏற்பட்டு வருகின்றன. இந்த எல் நீனோ தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் சந்திக்காத வறட்சியை தாய்லாந்து சந்தித்து வருகிறது. அங்குள்ள 76 மாகாணங்களில் 14 மாகாணங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகின்றன.வியட்நாமின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. கடந்த 90 ஆண்டுகளில் பார்த்திராத பஞ்சத்தை அந்நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

1.8 மில்லியன் குடிமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல் லாவோஸ், கம்போடியா ஆகியவையும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன.இந்நிலையில் வறட்சியை ஓரளவு போக்கும் விதமாக தங்கள் நாட்டில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், நீர் குறைந்துள்ள இந்த காலம் முழுவதுமே அணைகள் திறந்திருக்கும்.இதன் மூலம், தாய்லாந்து வியட்நாம், லாவோஸ், மியான்மர் போன்ற நாடுகள் நன்மை பெறும் என்று தெரிவித்துள்ளார்.