வவுனியா பூவரசங்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வலைப்பந்தாட்டப் போட்டிகள்!!

568

 
தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு பூவரசங்குளம் கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்ட கழகங்களுக்கிடையில் வலைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியீட்டிய கழக வீரர்கள் வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கந்தன்குளம் சன்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் சிவானந்தம் (ரவி) தலைமையில் நேற்று முன்தினம் (17.04.2016) கந்தன்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த வலைப்பந்தாட்ட போட்டியில் ஓமந்தை, வேப்பங்குளம், நெளுக்குளம், கற்பகபுரம், பாரதிபுரம், தாலிக்குளம் பூவரசங்குளம், வேலங்குளம், கந்தன்குளம் கிராமங்களைச்சேர்ந்த 18 அணிகள் பங்குபற்றியிருந்தன.

அணிக்கு நான்கு வீரர்களைக்கொண்டு விலகல் முறையில் (knockout) நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில்,
முதலாம் இடத்தை – அம்பிகை விளையாட்டுக்கழகமும் (பாரதிபுரம்),
இரண்டாம் இடத்தை – கிருஷ்ணா விளையாட்டுக்கழகமும் (தாலிக்குளம்),
மூன்றாம் இடத்தை – வேப்பங்குளம் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.

பூவரசங்குளம் கிராம அலுவலர் கஜேந்தன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சார்பில் அவரது பிரதிநிதியாக கந்தா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றியீட்டிய கழக வீரர்களை வெற்றிக்கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த வலைப்பந்தாட்ட போட்டிக்கான நிதியுதவி அனுசரணையை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13