வேலையில்லாத ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 லட்சம் மாத ஊதியம்: அரசு அதிரடி திட்டம்!!

498

job-seekers-beware-these-social-media-traps-46dbba7ca8-12

சுவிட்சர்லாந்து நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வித நிபந்தனை இன்றி மாதந்தோறும் 3 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகிலேயே முதன் முதலாக வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கு மாத ஊதியம் வழங்குவது குறித்து சுவிட்சர்லாந்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி, ஏதாவது ஒரு புதிய திட்டம் அல்லது சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு அந்நாட்டு மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அரசாங்கம் செயல்படுத்த முடியும்.மக்களிடம் பெரும்பான்மை குறைந்திருந்தால் அரசாங்கம் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே, வேலையில்லாத குடிமகன்களுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பான இந்த திட்டம் மீது எதிர்வரும் யூன் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில், அரசின் திட்டத்திற்கு மக்கள் வாக்களித்து விட்டால், உடனடியாக இந்த திட்டம் அமுலுக்கு கொண்டு வரப்படும்.அதாவது, சுவிஸில் வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் 2,500 பிராங்க்(3,76,980 இலங்கை ரூபாய்) வழங்கப்படும்.

வேலையில்லாத வாலிபர்களுக்கு 625 பிராங்க்(94,256 இலங்கை ரூபாய்) மாத ஊதியமாக வழங்கப்படும்.இதே வரிசையில், ஒரு குடிமகன் குறைந்த பட்சம் 1,000 பிராங்க் மாத ஊதியமாக பெற்று வந்தால், அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் கூடுதலாக 1,000 பிராங்க் அளிக்கப்படும்.

ஆனால் ஏற்கனவே 2,500 பிராங்க் மாத ஊதியம் பெற்று வரும் குடிமகனுக்கு, மேலே கூறப்பட்ட அரசாங்க ஊதியம் வழங்கப்பட மாட்டாது.எனினும், மேலே கூறப்பட்டுள்ள இந்த தொகையை இன்னும் அரசாங்கம் இறுதி செய்யவில்லை. இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ள அதிகாரிகள் இந்த தொகையை அரசிற்கு சிபாரிசு செய்துள்ளனர்.

பொதுமக்களின் வாக்கெடுப்பில் இந்த திட்டம் நிறைவேற ஒப்புதல் அளித்தால், வேலையில்லாத குடிமகனுக்கு எவ்வளவு மாத ஊதியம் வழங்கலாம் என அரசு இறுதி செய்யும். எனினும், வேலையில்லாத குடிமகனுக்கு சராசரியாக மாதம் 2,500 பிராங்க் ஊதியமாக கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலையில்லாத குடிமகன்களுக்கு நிபந்தனை இல்லாத மாத ஊதியம் அளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 208 பில்லியன் பிராங்க் செலவாகும்.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வறுமையை வேரோடு நீக்குவதற்கும், பொதுமக்கள் கண்ணியத்தோட நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் இந்த திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதும், அல்லது தடை செய்யப்படுவதும் எதிர்வரும் யூன் மாதம் நடக்கவுள்ள வாக்கெடுப்பு தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.