சூரியவெவ பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற போட்டியில் கலந்து கெண்ட ஒருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சூரியவெவ பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த 19ம் திகதி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட சூரியவெவ – மீன்பிடிக் கிராம பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இந்தநிலையில் தனது கணவருக்கு நெஞ்சுவலி பிரச்சினை இருப்பதால் இந்த மரதன் ஓட்டப் போட்டியில் அவரைக் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தான் கூறியதாகவும் எனினும் அவர் அதனை கருத்தில் கொள்ளாது போட்டியில் கலந்து கொண்டதாகவும், உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் போட்டிக்கு முன்னர் வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.