முல்லைத்தீவில் நடந்த சோகம் : பறவைக் காவடியுடன் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளைஞன் பலி!!

671

 
ஒட்டிசுட்டான் தான்தோண்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று (21.05.2016) சற்று முன் தூக்குகாவடி ஏற்றிச்சென்ற ரக்டர் தடம் புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார். இச் சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

தமிழரின் பாரம்பரியங்களில் ஒன்றாக காணப்படும் தூக்குக்காவடி நேத்திக்கடனை நிறைவேற்ற ஒட்டிசுட்டான் தான்தோண்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து முல்லைத்தீவு மம்மில் பிள்ளையார் ஆலயத்திற்கு தூக்குக்காவடி ஏற்றிச்சென்ற டக்டர் இன்று காலை தடம் புரண்டதில் தூக்குக்காவடி எடுத்த வசந்தகுமார் பிரதீபன் என்ற 26 வயது இளைஞன் சம்பவ இடத்திலிலேயே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்குகாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10)