பயிற்சியின் போது திடீரென உயிரிழந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்!!

753

Dead

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது திடீரென்று கீழே விழுந்து இறந்து போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்கா முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கெட் அகடமியை நடத்தி வருகிறார். அங்கு பயிற்சி மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது இடைவேளையில் லுகான்யா டஸ்கி,22 என்ற வீரர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு இதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் அகடமியை நடத்தி வந்த பின்கோ நகம் கூறுகையில், டஸ்கி நலமாகவே இருந்தார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் உடற்தகுதி தேர்வின் ஒரு பகுதியை முடித்து விட்டு தனது சட்டையை கழற்றி சக வீரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது திடீரென இரும்பிக் கொண்டே கீழே விழுந்து விட்டார்.

நாங்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், இருப்பினும் தாமதம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

டஸ்கி குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூன் லோர்கட், இது அதிர்ச்சி தரும் செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.