
மன்னாரில் கடும் வெப்பநிலை தொடர்வதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன், வெப்பத்தை தனிக்கும் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் மன்னார் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னாரில் இளநீருக்கும், எலுமிச்சம் பழத்திற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் கெக்கரிக்காய், வெள்ளரிப்பழம், பப்பாசிப்பழம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதுடன் அதன் விலையும் சரிசமனாக அதிகரித்துள்ளது.
முன்னர் 40 ரூபாவுக்கு விற்பனையாகிய இளநீர் தற்போது 60 ரூபா முதல் 80 ரூபாவரை அதிகரித்துள்ளது.இதேவேளை ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த வெள்ளரிப்பழம் மற்றும் பப்பாசிப்பழங்களின் விலை தற்போது 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





