
ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் பெண் ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
61 வயதான குறித்த பெண் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கடலில் மூழ்கிய சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு ஹிக்கடுவை-ஆராய்ச்சிக்கந்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





