யாழ்.பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 4 இடங் களில் ஒரே இரவில் 4 வீடுகளில் இளைஞ ர்குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவீடுகள் கடுமையான சேதமடைந்திருக்கின்றன.
நேற்றய தினம் இரவு அரியாலை, மாம்பழ ம் சந்தி, சோமசுந்தரம் அவனியூ, யாழ்.இந்துக் கல்லூரி அருகாமை ஆகிய 4 இடங்களில் 4 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள் ப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் களவு நோக்கத்தில்மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றபோதும், இளைஞர் குழு ஒன்றினால்விசமத்தனமாக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப்பினர் கூறியிருக்கின்றார்கள்.
நேற்றய தினம் நள்ளிரவு தாண்டி 3 மோட்டார்சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்கள் வீடுகளின் கதவுகள், ஐன்னல்கள் போன்றவற்றைஅடித்து உடைத்து அட்டகாசம் புரிந்திருக்கின்றார்கள். இவ் விடயம் தொடர்பாக தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சேர்ந்தபகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் ஒரு மணி நேரம் தங்கள் பகுதியில்சுற்றி திரிந்து தாக்குதல் நடத்தியதாகவும் இது குறித்து தாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தபோதும் பொலிஸார் உடனடியாக சம்பவஇடத்திற்கு வரவில்லை எனவும் குறித்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.






