கொளுத்தும் வெயிலில் கொளுத்திப் போடும் ஜெயலலிதா!!

564

Jeya

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டும்வரும் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்தில் மினி பார், தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய கிட் போன்றவை வழங்கப்படுகின்றன.

காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம்அருகே உள்ள வாரணவாசியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு, ஜெயலலிதா படம் போட்ட பச்சைத்தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய ‘கிட்’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

முன்பக்கத்தில் வயதானவர்களே அதிகம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரிதும் அவதிப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு அம்மா வருகையில், வேட்பாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

இதில் பற்றாக்குறைக்கு சில தொண்டர்கள் மது அருந்தினர், முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்குப் பற்றிப் பேசிய போது, நிதானமாகக் குடித்துக் கொண்டே எல்.இ.டி திரையில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

போதை தலைக்கு ஏறிய நிலையில் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் பேசஆரம்பித்த 15வது நிமிடத்தில் இருந்தேகூட்டம் கலையத் தொடங்கிவிட்டது.

இதனால் காலி நாற்காலிகளை ஒன்றன்மீது ஒன்றாக உயரமாக அடுக்கி அதன் மீதுஏறி தொண்டர்கள் பிரசாரத்தைப் பார்க்கத் தொடங்கினர். பின்பக்கத்திலிருந்து தொண்டர்கள் வெளியேறியதை காவல் துறையினராலும், கட்சியினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு மணி நேரம் கழித்தும் முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார். முதல்வர் பிரசாரத்தை முடிக்கும் முன்பே 75 சதவிகித தொண்டர்கள் வெளியேறிவிட்டார்கள்.