40 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்!!

689

ISIS_TRAIL_OF_TERROR_16x9_992

40 இலங்கை முஸ்லிம்கள் சிரிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக பிரபல பயங்கரவாத தடுப்பு குறித்த சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த முஸ்லிம்கள் சிரியா மற்றும் ஈராக்கிற்கு சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் சிலர் போரில் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கை முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் மீளவும் தாய் நாடு திரும்ப விரும்புகின்றனர்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து நாடு திரும்பும் நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.