சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா பண்டாரிகுளம் பொலிஸ் பிரிவினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் இப்போட்டியானது நேற்று (24.04.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6 அணிகள் கொண்ட போட்டியாக அமைந்தது.
இப்போட்டியில் சூப்பர் ஸ்டார் A அணி முதலாமிடத்தையும் சூப்பர் ஸ்டார் B அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. இப் போட்டித் தொடரின் சிறந்த ஆட்ட வீரராக ஜெ.றுசாந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.






