வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா நேற்று (24.04.2016) வவுனியா வேப்பங்குளம் வங்கி வளாகத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு.ஜெயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வங்கி தலைப்பீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார், வவுனியா மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.பால்ராஜ், வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர் (வேப்பங்குளம்) செல்வி ப.ஜானகி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.