
சிசுவொன்றைப் பிறசுவித்து அதனைக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிரிந்திவல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இரத்தப் போக்கு காரணமாக நேற்று வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் சிசுவொன்றை பிறசுவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி, அவர் குறித்த சிசுவை துணியொன்றில் சுற்றி மலசலகூடத்தில் வீசியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.




