ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் சிக்கினார்!!

603

arrests

ஜனாதிபதிக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீசா பிரச்சினை காரணமாக மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரைக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.