இந்திய – இலங்கை பாலம்! மீண்டும் இலங்கை மறுக்கிறது!!

597

rams_bridge_lg

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் எவ்விதபேச்சுக்களும் இடம்பெறவில்லை என்று இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது.இலங்கையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை இன்று தெரிவித்துள்ளார்.

இந்த பாலம் அமைப்பு தொடர்பாக பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய தரப்புதெரிவித்து வருகிறது.எனினும் இலங்கை இன்னும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்று அமைச்சர்குறிப்பிட்டார்.உத்தியோகபூர்வமாகவோ, உத்தியோகபூர்வமற்ற வகையிலோ பேச்சுக்கள் இடம்பெறவில்லைஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதீன் கட்காரியே அடிக்கடி இந்த பாலம்தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பாலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5.19பில்லியன் டொலர்கள்நிதியொதுக்கீட்டில் 22 கிலோமீற்றர் தூரத்துக்கு தலைமன்னாருக்கும் தனுஸ்கோடிக்கும்இடையில் அமைக்கப்படவுள்ளதாக நிதீன் கட்காரி தெரிவித்து வருகிறார்.