காரில் தூங்கிய சாரதி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

450

1 (50)

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில், கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற கார் ஒன்று வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று சனிக்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.காரில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.