
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா வரும் 06.06.2016 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இன் நிலையில் ஆலயத்தின் பெயரில் போலியான பற்றுச்சீட்டு அச்சிடப்பட்டு காவி உடையுடன் திருடர்களால் பணம் சேர்க்கப்பட்டு வருகின்றமை ஆலய பரிபாலன சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே நாதம்பிரான் அடியார்களே..!! ஆலய பரிபாலன சபையினரால் யாருக்கும் பணம் சேர்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதனையும், நேர்த்திக்குப் பணம் செலுத்தும் அடியார்கள் பொங்கல் விழாவில் ஆலய பரிபாலன சபையினரிடம் ஒப்படைத்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.





