வவுனியாவில் இன்று (01.05.2016) புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய புரட்சிகர மேதின பேரணியானது சூசைப்பிள்ளையார் வீதி – இரண்டாம் குருக்குத்தெரு வீதி – வவுனியா பேரூந்து தரிப்பிடம் – புகையிரதநிலைய வீதி – பூங்கா வீதியுடாக 11.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.
இப் பேரணியில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், மைத்திரி ரணில் அரசே தேர்தல் வாக்குறுதி என்னாச்சு, அரசியல் கைதிகளை விடுதலை செய், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என பல கோசங்கள் எழுப்பப்பட்டன.
அரசே அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் எனும் வாசகத்துடன் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கும் பேரணி வாகனம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.