
மாத்தறை மாவட்டம் கந்தர – தலல்ல கடற்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரிழ் மூழ்கி காணாமல் போய் உள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞன் 17 வயதுடைய தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரிழ் மூழ்கிய இளைஞனை பொலிஸார், பிரதேசவாசிகள் கடற்படையினரின் உதவியுடன் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.





